Home » Latest Stories » விவசாயம் » அட்டகாசமான லாபமுள்ள ஆடு வளர்ப்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

அட்டகாசமான லாபமுள்ள ஆடு வளர்ப்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

by Gunasekar K
316 views

விலங்கு வளர்ப்பு என்பது நெடுங்காலமாக உள்ள ஒரு தொழில். மனிதர்கள் இறைச்சி, பால், முட்டை போன்ற தேவைகளுக்காக விலங்குகளைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கின்றனர். விலங்கு வளர்ப்பில் ஆடு வளர்ப்பு முக்கிய இடம் பெறுகிறது. ஆடுகள் அதன் தோல், பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. 

நமது தேசத் தந்தை காந்தி அவர்களது விருப்பமான உணவில் ஆட்டு பால் முக்கிய இடம் வகித்தது. ஆட்டின் பால், தோல் மற்றும் இறைச்சியைப் போல அதன் கழிவும் வணிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் ஆட்டு கழிவு மண்ணில் தழை சத்தை அதிகப்படுத்துகிறது. இது நேரடியாக விளைச்சலை அதிகப்படுத்துகிறது. மேலும், ஆட்டு எரு மண்ணின் தன்மையை சிறப்பாக மாற்றும் மற்றும் மண்ணின் நீர் தக்கவைப்பு  திறனை அதிகரிக்கும். அப்படியான சிறப்பு வாய்ந்த ஆடு வளர்ப்பு பற்றி அனைத்தையும் அறிவோம். 

ஊட்டச்சத்து நிறைந்த ஆட்டுப்பால்

தாய்ப்பாலுக்கு அடுத்து நமது கோமாதா எனப்படும் பசுவின் பால் அனைவராலும் விரும்பி அருந்தப்படுகிறது. நிற்க. பசுவின் பாலை விட அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட ஒரு பால் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். அதுதான் ஆட்டுப்பால். கார்போஹைட்ரேட், புரதம், மெக்னீசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ் என அனைத்து ஊட்டச்சத்து மற்றும் தாது உப்புகள் அளவில் பசுவின் பாலை விட ஆட்டுப்பாலே முதன்மையாக உள்ளது. 

லாக்டோஸ் டால்ரான்ஸ் குறைவாக உள்ளவர்களின் சிறந்த தேர்வாக ஆட்டு பால் உள்ளது. மேலும், ஆட்டு பாலில் உள்ள சிறிய கொழுப்பு கோளங்கள் செரிப்பதற்கு மிகவும் எளிதானது.  

ஆடு இனத் தேர்வு & கொட்டகை அமைத்தல்

சைப்ரஸ் ஷாமி (சைப்ரஸ்), சானியன் (ஸ்விட்சர்லாந்து), ஜம்னாபாரி, டார்பெர் வகை, பாண்டூர், அமின்காட், நாரி சுவர்ண வகை, டம்பா (அவாசி) போன்ற பல வகை ஆடு இனங்களைத் தேர்வு செய்து வளர்க்கலாம்.   

உயர்த்தப்பட்ட கொட்டகை அமைப்பது விலங்குகள், மழை போன்றவற்றை எளிதாக சமாளிக்க உதவுகிறது. கொட்டகையை உங்கள் பண வசதிக்கு ஏற்ப இரும்பு அல்லது மரத்தில் அமைக்கலாம். சிறந்த காற்றோட்டம் மற்றும் மழை வெயிலிலிருந்து பாதுகாக்கும் படி அமைக்க வேண்டும். 

தொழிலாளர் தேவை, தீவன மேலாண்மை & நோய் தடுப்பு முறைகள் 

1000 ஆடுகளை வளர்க்க 5 தொழிலாளர்கள் தேவைப்படும். அவர்களுக்கு தேவையான இருப்பிடம், உணவு, சம்பளம் தருவது அவர்களைத் தக்க வைக்க உதவுகிறது. மேலும் அவர்களிடம் ஒப்பந்தம் போடுவது மிகவும் நல்லது.

3 வகையான தீவனங்கள் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் உலர்ந்த தீவனமே வழங்கப்படுகிறது. வெயில் காலங்களில் நீர்ச்சத்து நிறைந்த தீவனம் வழங்க வேண்டும். சூப்பர் நேப்பியர், மக்கா சோளம், கோதுமை தவிடு, கச்சா புரோட்டீன், கடலை புண்ணாக்கு போன்றவற்றை வழங்கலாம்.

ஆடுகளுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதை தடுக்க நீங்கள் தடுப்பூசி (என்டோடோக்சீமியா (வருடத்திற்கு 2 முறை), பெஸ்டி டாஸ் பெட்டிடிஸ்  ரூமினன்ட்ஸ் (2 வருடங்களுக்கு ஒரு முறை), ரத்தக்கசிவு செப்டிசீமியா (ஒவ்வொரு வருடமும்), ஷீப் பாக்ஸ் & கோட் பாக்ஸ் (1 வருடமும்), ப்ளூ டங் (1 வருடமும்) மற்றும் புட் அண்ட் மௌத் (1 வருடமும்)) போட வேண்டும். இந்தத் தடுப்பூசிகள் அனைத்தையும் 3 மாதங்கள் ஆன குட்டிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.  

அரசு ஆதரவு, மானியம், காப்பீடு மற்றும் கடன் திட்டங்கள்  

ஆடு வளர்ப்பிற்கு அரசு மானியம், கடன் திட்டங்கள் உள்ளது. 50% மானியமாக பெறலாம். ஆண்டு மதிப்பில் சுமார் 5% தொகைக்கு காப்பீடு செய்ய வேண்டும். 

சந்தைப்படுத்தல் & ஏற்றுமதி 

ஆட்டின் பாலை பாலாகவோ அல்லது மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய், பாலாடை கட்டி, பன்னீர் என்று தயாரித்தும் விற்கலாம். மேலும், 1 கிலோ ஆட்டு இறைச்சி 750 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விற்கிறது. அதன் கழிவும் இயற்கை உரமாக பயன்படுவதால் அதிக லாபம் பெறலாம். 

வெளிநாட்டு ரக ஆடுகள் (டார்பர் குட்டி 1 ½ லட்சம் வரை விலை போகிறது) பால், இறைச்சிக்கு அதிக தேவை இருப்பதால் நீங்களே விற்பனை செய்வது உங்கள் லாபத்தை அதிகரிக்கும். மேலும், ஏற்றுமதியும் செய்யலாம்.  

முடிவுரை

சிறந்த லாபம் தரும் 1000 செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழியாக 1 கோடி ரூபாய் சம்பாதிப்பதற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் விரிவாக ffreedom ஆப் இல் அறிந்துகொண்டோம். 

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.