Home » Latest Stories » விவசாயம் » மண்ணைப் பொன்னாக்கும் இயற்கை உரங்கள்

மண்ணைப் பொன்னாக்கும் இயற்கை உரங்கள்

by Gunasekar K
150 views

வளர்ந்து வரும் அறிவியல் யுகத்தில், உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. எனவே, மக்கள் செயற்கை உரத்தை முடிந்த வரை தவிர்க்கின்றனர். மக்களின் இந்த மனமாற்றத்திற்கு ஏற்ப விவசாயிகளும் செயற்கை உரத்தைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்துகின்றனர். செயற்கை உரங்களை ஒப்பிடும்போது இயற்கை உரங்கள் விலை மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன. உதாரணமாக மண்புழு உரம், தேமோர் கரைசல், ஜீவாமிர்தம், தழைக்கூளம் போன்றவை எளிதாக நமது வயல்வெளிகளிலேயே தயாரித்து கொள்ளலாம். இவையனைத்தும் விவசாயம் மற்றும் அது தொடர்பான மாடுகள், ஆடுகள், கோழிகள் மற்றும் தாவரக் கழிவுகள் வழியாக நமக்கு கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவதால் இயற்கையாக நச்சில்லாமல் விளைவித்த நெல், கரும்பு, வாழை, பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை நல்ல விலைக்கு விற்று நல்ல லாபம் பெறலாம். எனவே, விவசாயிகளுக்கு நல்ல லாபம் தருவதோடு மக்களுக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தை வழங்குகிறது. இது விவசாயிகளின் தற்சார்பு விவசாயத்தை ஊக்குவிக்கிறது.

குறைந்த விலை, நிறைவான விளைச்சல் 

உயிரி உள்ளீடுகள் என்பது வயலில் உருவாகும் தாவரக் கழிவுகள். கோழி, ஆடு மற்றும் மாடு இவற்றிலிருந்து பெறப்படும் கழிவுகளை எருவாக  பயன்படுத்துவது. இவ்வகை எருக்களின் மூலப் பொருட்கள் நமக்கு எளிதாக அதுவும் விலையின்றி கிடைக்கிறது. எனவே, செயற்கை உரங்களுக்காக காத்திருப்பது தவிர்க்கப்படுகிறது.  

எனவே, இது தற்சார்பு விவசாயத்தை ஊக்குவிக்கிறது. இது பொருளாதாரச் சுதந்திரத்தை வழங்குகிறது. நம்மிடம் உள்ள பொருட்களைத் திறமையாக பயன்படுத்தி ஒட்டுமொத்த கழிவுகளைக் குறைக்க உதவுகிறது. மேலும், இயற்கை உரங்கள் மண்ணிற்குத் தேவையான தழைச்சத்து, மணி  

சத்து போன்றவற்றை வழங்குகிறது. இது, பயிர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவித்து சிறப்பான விளைச்சல் பெற உதவுகிறது. இயற்கை முறையில் விளைவித்த பயிர் பொருட்களுக்கு நல்ல சந்தை தேவை உள்ளது. 

மண்ணிற்கு ஜீவனை அளிக்கும் ஜீவாமிர்தம்

இயற்கை உரங்களில் அதாவது உயிரி உள்ளீடுகளில் மிகவும் முக்கியமானது ஜீவாமிர்தம். பெயருக்கு ஏற்றாற்போல மண்ணிற்கு சிறந்த ஊட்டச்சத்து ஆதாரத்தை வழங்குகிறது. 

ஜீவாமிர்தம் தயாரிக்க நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுங்கோமியம், வெல்லம் அல்லது கரும்புச்சாறு, தானிய மாவு (தட்டைப்பயறு அல்லது துவரை அல்லது கொள்ளு அல்லது கொண்டைக் கடலை அல்லது உளுந்து) காட்டின் மண், குளோரின் கலக்காத நீர் போன்றவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை என 3 நாட்களுக்கு ஒரு முறை கலக்கி விட வேண்டும்.  ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன. இவ்வாறு கலக்கப்பட்ட இந்த நுண்ணுயிர் கலவையே ஜீவாமிர்தம். தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிந்த கலவையை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும். 

சிறப்பான பயிர் உருவாக்கத்தை அளிக்கும் அமிலம் 

அமிலம் என்றாலே அதன் மோசமான பக்கம் தான் நம் நினைவிற்கு வரும். ஆனால், இந்த அமிலம் பயிர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து ஆதாரமாக உள்ளது. ஆம். அதுதான் மற்றொரு உயிரி உள்ளீடு ஆன மீன் அமிலம். 1 கிலோ உள்ளூர் மீன், 1 கிலோ வெல்லம் எடுத்துக்கொள்ளுங்கள். மீனின் குடல்கள் நாற்றம் அடிக்கும் என்பதால் அவற்றை நீக்கிவிட வேண்டும். மீனை சிறு துண்டுகளாக போட்டு அதனுடன் தூள் செய்யப்பட்ட வெல்லம் சேர்த்து ஒரு பெரிய அளவிலான கண்ணாடி ஜாரில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஜாரை இறுக்கமாக கட்டி விட வேண்டும். பிறகு நன்றாக குலுக்கி விட வேண்டும். 30 நாட்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர் நைலான் வலையை எடுத்து 300 முதல் 500 மிலி திரவத்தை வடிகட்டிவிட வேண்டும். ஒரு லிட்டர் நீரில் 5 மிலி மீன் அமிலம் கலந்து பயன்படுத்தலாம். இது தாவரங்களுக்கான மிக சிறந்த ஊட்டச்சத்து ஆதாரமாக விளங்குகிறது. 

கருப்பு வைரம் போல மின்னும் மண்புழு உரம்

உயிரி உள்ளீடுகளில் மிகவும் முக்கியமான மற்றொரு உரம் மண்புழு உரம். மண்புழு உரம் தயாரிக்க மக்கக்கூடிய தோட்டக் கழிவுகள், சமையலறை கழிவுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை நன்றாக  மக்குவதற்கு 60 நாட்கள் ஆகலாம். பின்னர், இந்தக் கலவையில் மண்புழுக்களை விடவும். இதில் இருந்து 60 நாட்களில் கருப்பு நிறத்திலான மண் வாசனை உள்ள மண் புழு உரம் தயாராகிவிடும். 

முடிவுரை

விவசாயத்திற்கான உயிரி உள்ளீடுகள் வழியாக உரங்களின் செலவைக் குறைத்தல் பற்றி அனைத்து தகவல்களையும் ffreedom ஆப் வழியாக தெளிவாக அறிந்துகொண்டோம்.  

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.