Home » Latest Stories » விவசாயம் » குறைவான விவசாய நிலத்தில் அதிக லாபம் பெறுங்கள்

குறைவான விவசாய நிலத்தில் அதிக லாபம் பெறுங்கள்

by Gunasekar K
114 views

நமது விவசாயிகள் லாபம் பெறாமல் நஷ்டம் அடைவதற்கு முக்கிய காரணம் தனது ஒட்டுமொத்த நிலத்திலும் ஒரே பயிரை விளைவிப்பது. உதாரணமாக கரும்பு, நெல் போன்றவற்றை தனது நிலம் முழுவதும் பயிரிடுவது. அதேபோன்ற பயிர்களை அதிக விவசாயிகள் பயிரிடும்போது உற்பத்தி அதிகரித்து ஒட்டுமொத்த விலை குறைந்து விடுகிறது. எனவே, இதுபோன்ற சூழல்களில் விவசாயிகளுக்கு அவர்கள் செலவிட்ட தொகையில் பாதியைப் பெறுவது கூட கடினமாகிறது. அதற்கு பதிலாக விரைவில் விளையக்கூடிய பயிர்களை விளைவிப்பது அதிக லாபத்தைத் தரும். குறைந்த அறுவடை காலம் கொண்ட பயிர்களான கீரைகள், காய்கறிகளைப் பயிரிடுவது அதிக லாபம் தருவதோடு மண்ணின் வளத்தையும் காக்கும்.

மாற்றி யோசியுங்கள் 

ஒரே வகை பயிரை நம்பியிருக்காமல் பல விதமான பயிர்களை விளைவிக்க வேண்டும். அதாவது பலவகையான காய்கறிகள், கீரைகள். எடுத்துக்காட்டாக கத்திரி, வெண்டை, முள்ளங்கி, பீட்ரூட், உருளை கிழங்கு மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகளையும் சிறு கீரை, அரை கீரை, வெந்தயக் கீரை, வல்லாரை, பொன்னாங்கண்ணி போன்ற கீரைகள். பருப்பு வகைகளான உளுந்து, பச்சை பயிறு மற்றும் காராமணி போன்றவற்றையும் ஊடு பயிர்களாக பயிரிட்டு அதிக லாபம் பெறலாம். பல பயிர்கள் பயிரிடுவதால் அவற்றின் அறுவடை காலம் வேறுபடும். எனவே, தினமும் ஏதாவது ஒரு பொருளை அறுவடை செய்து சந்தைப்படுத்தலாம். மேலும், இவ்வகையான பயிர்களை விரைவில் அறுவடை செய்யலாம் மற்றும் நிரந்தர சந்தைத் தேவையும்  உள்ளது. மேலும், இந்த வகையான பயிர்களுக்கு பல்வேறு முறைகளில் அதாவது சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் போன்றவற்றை செய்யலாம்.   

நிலம் தயாரித்தல் 

முதலில் நிலத்தை நன்றாக உழுது பண்படுத்த வேண்டும். பின்னர் தேவையான ஊட்டசத்துக்கள் (ஜீவாமிர்தம்) நிறைந்த உரத்தை இட வேண்டும். நீர் தேவை குறைவு என்றாலும் அறுவடை காலம் வரை தேவையான நீர் கிடைக்கும் வகையில் நீர் ஆதாரத்தை சிறப்பாக தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு ஏக்கரில் 90 முதல் 100 படுக்கைகள் அமைக்கலாம். அதாவது 3 அடி அகலத்தில் நூறடி நீளத்தில் படுக்கைகள் அமைக்கலாம். அந்த படுக்கையில் நவ தானியங்களை விதைத்து நைட்ரஜன் வாயுவை நிலைநிறுத்த வேண்டும். நீர் தேவைக்காக நிலத்தில் மழைநீர்  

சேகரிப்பு குளத்தை அமைப்பது நல்ல பலன் அளிக்கும்.

காய்கறிகள், கீரைகள் பயிரிடுதல் 

பண்படுத்திய நிலத்தில் 25 வகையான காய்கறிகள், கீரைகளை விதைகளை போட்டு விளைவிக்கலாம். காய்கறிகள் (கத்திரிக்காய், வெண்டைக்காய்), நிலத்தடி காய்கறிகள் (உருளை, பீட்ரூட், கேரட்), கொடி வகைகள் (பூசணி, தக்காளி, பீர்க்கங்காய்) என கலந்து பயிரிட வேண்டும். 1 அடிக்கு 1 அடி கீரை (வெந்தயக் கீரை, பாலக் கீரை, கொத்தமல்லி) பயிரிட வேண்டும், இடையில் செடி வகையை வைக்க வேண்டும். பக்கவாட்டில் நில காய்கறிகள். 35 அடிக்கு ஒரு கொடி காய்கறி என நட வேண்டும். 

விதைகள் தேர்ந்தெடுத்தல் மற்றும் இயற்கை உரப் பயன்பாடு 

நல்ல தரமான விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் (பீச்சாம்ரூட்டா (Bejamruta) – மாட்டு சாணம், கோமியம் மற்றும் சுண்ணாம்பு கலவை) பயன்படுத்தி விதைகளை சுத்திகரிக்க வேண்டும். எள் தீங்கு  விளைவிக்கும் பூச்சிகளின் உணவாக இருப்பதால் நமது காய்கறி மற்றும் கீரையை பாதிக்காது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை உரங்கள் ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். சூரிய பூச்சிவிரட்டிகள் வழியாகவும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். இது 1500 ரூபாய்க்கு கிடைக்கிறது 

வேப்பம் கரைசலையும் பயன்படுத்தலாம். 

சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை விலை நிர்ணயம் 

ஒரு கட்டு கீரை 10 ரூபாய்க்கு விற்கலாம். அதுபோல கத்திரி, வெண்டை, உளுந்து போன்றவற்றை சந்தை தேவைக்கு ஏற்ப விற்கலாம். இதே முறையைப் பின்பற்றி ஒவ்வொரு படுக்கையிலும் விளைந்த காய்கறிகள் மற்றும் கீரைகளைச் சந்தைப்படுத்தினால் ஒரு நாளைக்கு 5000 ரூபாய் சம்பாதிக்கலாம். ஒன்று நாமே விற்கலாம் அல்லது தெரிந்த காய்கறி கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் விற்கலாம்.

முடிவுரை

விவசாய நிலத்தில் பல வகை பயிர்களை (பழங்கள், காய்கறிகள், கீரைகள்) நடவு செய்வதன் வழியாக 1 ஏக்கரில் 1 லட்சம் சம்பாதிப்பதற்கான செயல்முறைகள் அனைத்தையும்  ffreedom App வழியாக அறிந்துகொண்டோம்.

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.