உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க தேவையானவற்றில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. புரதம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலின் கட்டமைப்பு தொகுதிகளாக பயன்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதனின் தனது புரதத் தேவையைப் பூர்த்தி செய்ய கோழி, ஆடு போன்ற விலங்குகளை உண்கிறான். இந்த வரிசையில் மீனுக்கு முக்கிய இடம் உள்ளது. கொழுப்பு சேர்வது பற்றிய பயம் இல்லாமல் உண்ணக்கூடிய ஒரே உணவு மீன் உணவு. எனவே, மீன் வளர்ப்புக்கு நல்ல சந்தை தேவையுள்ளது. மீன்கள் பல்வேறு முறைகளில் வளர்க்கப்படுகின்றன. அதில் ஒன்று கூண்டு மீன் வளர்ப்பு.
கூண்டு மீன் வளர்ப்பு என்பது தற்போது மிகவும் பிரபலமாக உள்ள ஒரு தொழில்நுட்பம். இம்முறையில் மீன்கள் ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் கடல்களில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கப்படுகின்றன. இயற்கையான நீர் ஆதாரங்களில் வளர்க்கப்படுகிறது. எனவே, நீர் தட்டுப்பாடு பற்றி கவலைபட வேண்டாம். மேலும், வேகமாக வளரும் திறன் மற்றும் மலிவான கொள்முதல் விலை கொண்ட மீன் இனங்களான கெளுத்தி, ஜிலேபி போன்றவை அதிகமாக வளர்க்கப்படுகிறது. கெளுத்தி, ஜிலேபி போன்ற மீன்களுக்கு அதிக சந்தைத் தேவையும் உள்ளது. இவற்றின் உணவாக தாவர மற்றும் காய்கறி கழிவுகளைப் போடலாம் அல்லது நெல் உமி, பருத்தி புண்ணாக்கு போன்றவற்றை பயன்படுத்தலாம். அதிக சந்தைத் தேவை இருப்பதால் சந்தைப்படுத்தல், விற்பனை விலை நிர்ணயித்தல் போன்றவற்றை எளிதாக செய்யலாம்.
கூண்டுக்கிளி தெரியும். கூண்டு மீன் வளர்ப்பு பற்றி அறிவோம்
கூண்டு மீன் வளர்ப்பு என்பது குளம், ஏரி, ஆறு மற்றும் கடல் பரப்பில் மீன்களை வளர்ப்பது. இந்தக் கூண்டு பொதுவாக உயர் அடர்த்தி பாலிஎத்திலீன் அல்லது பாலி வினைல் குளோரைடால் அடிப்பகுதி அமைக்கப்படும். மேற்பகுதி கயிறில்லாத நைலான் வலை போன்ற அமைப்பால் மூடப்படும். பொதுவாக 6 மீ நீளம், 4 மீ அகலம் மற்றும் 4 மீ அளவுகளில் அமைக்கப்படும்.
பின்னர் இந்தக் கூண்டுக்குள் தேவையான மீன் இனங்களின் எந்தவித காயங்கள், தொற்றுகள் மற்றும் நோய்கள் இல்லாத மீன் குஞ்சுகள் விடப்படும்.
கூண்டு மீன் வளர்ப்பு – தேர்ந்தெடுக்க வேண்டிய மீன் இனங்கள்
கூண்டு மீன் வளர்ப்பில் அதிக வளர்ச்சி வீதங்களை கொண்ட மீன் குஞ்சுகள் வாங்கி வளர்க்க வேண்டும். எ.கா. கெளுத்தி மற்றும் ஜிலேபி. இந்த வகை மீன்கள் அதிக வேகத்தில் வளர்ந்துவிடுவதால் நீங்கள் விரைவாக லாபம் பெறலாம்.
மேலும், இந்த வகை மீன்கள் பரவலாக வளர்க்கப்படுவதால் பிற மீன் இனங்களோடு ஒப்பிடும்போது விலையும் குறைவாக இருக்கும். எனவே, இவற்றுக்கான விற்பனை வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
ஊட்டச்சத்துக்களின் ஊற்று – மீன் உணவு
கோழி, ஆடு போன்ற விலங்குகளை விட மீனில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒமேகா-3-கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் D மற்றும் ரிபோபிளேவின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதில் ஒமேகா-3-கொழுப்பு அமிலங்கள் இதய நோய், பக்கவாதம் மற்றும் முடக்குவாதம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
![](https://blog.ffreedom.com/tamil/wp-content/uploads/sites/5/2022/12/Cage-Fish-Culture-Earn-312-1024x1024.webp)
கூண்டு மீன் வளர்ப்பு – அரசு ஆதரவு மற்றும் மானியம்
நீலப் புரட்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த மீன் வள மேம்பாடு மற்றும் வளர்ச்சி கழகத்தின் கூண்டு மீன் வளர்ப்பை மேற்கொள்ள தேசிய மீன் வளர்ப்பு வளர்ச்சி கழகத்தின் சார்பில் பயிற்சி, கடன் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது.
கூண்டு மீன் வளர்ப்பு – விளைச்சல், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை
முறையான பராமரிப்பு, உணவு, நோய் மேலாண்மை செய்தல் ஒரு ஏக்கருக்கு 400-800 கிலோ மீன்களை பெறலாம். 1 கிலோ 320 முதல் 350 வரை விற்கிறது. அறுவடை செய்த மீன்களை நாமே விற்கலாம் அல்லது பெரு அங்காடிகள், இறைச்சி கடைகள் மற்றும் உணவகங்களில் விற்கலாம்.
மீனில் இருந்து மதிப்பு கூட்டப்பட்டு தயாரிக்கப்படும் பொருட்களான மீன் பசைகள், புரதக் கலவை (தூள்), மீன் பர்கர், கருவாடு, அதிக ஊட்டச்சத்து மதிப்பு கொண்ட மீன் எண்ணெய், மீன் மாவு தூள், மீன் சீவல் அப்பளம், மீன் கேக் மற்றும் மீன் புரதம் போன்றவற்றைத் தயாரிக்க பயன்படுகிறது.
முடிவுரை
அதிக லாபம் தரும் கூண்டு மீன் வளர்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் விரிவாகவும் தெளிவாகவும் ffreedom ஆப் வழியாக அறிந்துகொண்டோம்.