Home » Latest Stories » வணிகம் » வருமானத்தை அள்ளித்தரும் வன்பொருள் வணிகம்

வருமானத்தை அள்ளித்தரும் வன்பொருள் வணிகம்

by Gunasekar K
385 views

நீங்கள் ஒரு வீடு கட்ட வேண்டும் என எண்ணுகிறீர்கள். தேவையான பொருட்கள் என்ன? செங்கல், மண், ஜல்லி, சிமெண்ட், வெவ்வேறு அளவுகளில்  உள்ள பிளாஸ்டிக் பைப்புகள், வயர்கள், தாழ்ப்பாள்கள், மர கதவுகள், பிளாஸ்டிக் கதவுகள், வெவ்வேறு அளவுகளில்  உள்ள இரும்பு பைப்கள், வெவ்வேறு அளவுகளில் உள்ள ஸ்பேனர்கள், நட்டுகள், போல்ட்டுகள், திருப்புளிகள், சுத்தியல்கள், கொலுறுகள், பானல்கள், துளையிடும் கருவிகள், கம்பிகள் போன்று பல பொருட்கள் தேவைப்படும்.

இவை அனைத்தையும் ஒரே இடத்தில் விற்கும் ஒரு கடைதான் வன்பொருள் கடை. மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுவதால் வாடிக்கையாளருக்கு விலை குறைத்து விற்றாலும் உங்களுக்குக் கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்கும்.                  

இந்தப் பொருட்கள் அனைத்தும் நமக்கு மிக சிறந்த சௌகர்யம் மற்றும் பாதுகாப்பை அளிக்கின்றன.  மேலும், நமது வீடு கால காலத்திற்கும் நீடித்து நிலைத்திருக்க இப்பொருட்கள் அனைத்தும் உதவுகிறது. 

அதிக வலிமை, குறைந்த தேய்மானம் 

கட்டிடம் உறுதியாக நிற்க மிகவும் வலிமையான அதேநேரம் குறைந்த  தேய்மானம் மற்றும் உடைதலைக் கொண்ட எஃகு மற்றும் டைட்டானியம் போன்ற உலோகங்கள் கான்கிரீட் தளம் போன்ற அதிக சுமைகள் தாங்குவதற்கு பெரிதும் பயன்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அலுமினிய உலோகங்கள்  அரிமானத்தைத் தாங்கும் திறன் கொண்டவை என்பதால் ஜன்னல்கள், கப் போர்டுகள் மற்றும் வெளிப்புறக் கட்டமைப்புகள் மற்றும் அதிக ஈரம் கசியும் இடங்களான  சமையல் அறை, குளியல் அறை, கழிவறை போன்றவற்றை கட்டமைக்க பயன்படுகின்றன. 

தாமிரம் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்கள் வெப்பத்தை எளிதாக கடத்தக்கூடிய உபகரணங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்க பயன்படுகிறது. எஃகு மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களை மறுசுழற்சி செய்ய முடியும் என்பதால் சுற்றுசூழலுக்கு  ஏற்றது. 

காலத்தை வென்று நிற்கும் கான்கிரீட்

கான்கிரீட் என்பது நீர் மற்றும் சிமெண்ட் கொண்டு உருவாக்கப்படும் கலவை. இது விரைவில் கெட்டியாகும் தன்மை கொண்டது. கான்கிரீட் அதிக எடை தாங்குவதோடு அதிக வருடங்கள் நீடித்து உழைக்கும்  திறன் கொண்டது. வானிலை மாற்றங்கள் (மழை, குளிர் மற்றும்  வெயில்) மற்றும் அரிமானத்தைத் தாங்கும் இந்தக் கான்கிரீட்டை  உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவங்களாக அமைக்கலாம் மற்றும் குறைந்தபட்ச பராமரிப்பே போதுமானது.  

பிற கட்டமைப்பு பொருட்களான மரம் மற்றும் எஃகு போன்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில் கான்கிரீட் மிகவும் விலை குறைவானது. 

கான்கிரீட் தீயை எதிர்க்கும் திறன் மற்றும் இரைச்சல் மற்றும் சத்தத்தைத் தடுக்கும் திறன் கொண்டது. மேலும், கான்கிரீட் மறுசுழற்சி செய்யப்படக்கூடிய பொருட்களைக் கொண்டும் உருவாக்கப்படுகிறது. எனவே, இப்பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத உகந்த பொருட்கள். 

வலிமையைக் கூட்டும் உலோகங்கள் 

வன்பொருள் வணிகத்தில் பல வகையான இரும்பு, ஸ்டீல், துத்தநாகம், தாமிரம் போன்ற பல உலோகங்களால் உருவாக்கப்பட்ட பல பொருட்கள்  விற்கப்படுகின்றன. ஸ்டீல் கான்கிரீட் தளங்களை மேலும் உறுதியாக்க  பயன்படுத்தப்படுகின்றன. அரிமானம் எதிர்ப்புத்திறனுள்ள ஜன்னல் ஓரங்கள், கூரை அமைப்புகள், ஜன்னல் கட்டமைப்புகள் போன்றவற்றை உருவாக்க அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. 

மின்கம்பிகள் மற்றும் குழாய்கள் போன்றவற்றை அமைக்க  பயன்படுகிறது. கூரைகள் மற்றும் பிற கட்டுமானக் கூறுகளை அமைக்கவும் தாமிரம் பயன்படுத்தப்படுகிறது. இரும்பு, கட்டமைப்பு ஸ்டீல் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்க தேவையான வலுவூட்டப்பட்ட பார்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. 

துத்தநாகம் என்பது அரிமானத்தை எதிர்க்கும் உலோகம். இது கூரைகள், பிளாஷிங் மற்றும் பிற கட்டுமானக் கூறுகள் தயாரிக்க பயன்படுகின்றன.   

அதிக தேவை, நிறைந்த லாபம் தரும் வன்பொருள் வணிகம்  

உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் வேகமான நகரமயமாக்கல் மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சி காரணமாக வன்பொருள் மற்றும் கட்டுமான வணிகத்தின் விற்பனை அசுர  வளர்ச்சி  அடைந்துள்ளது. அதாவது, 2021 ஆம் ஆண்டு கணக்குப்படி 609.6  பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது 2026 ஆண்டு வரை 6  சதவீதத்தில் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சீனா, அமெரிக்கா, பிரிட்டன், இந்தோனேஷியாவை அடுத்து இந்தியா ஐந்தாவது சந்தையாக உள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அதிகரித்த வளர்ச்சி காரணமாக 2025 ஆண்டுக்குள் வன்பொருள் மற்றும் கட்டுமான வணிகத்தில் இந்தியாவின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 1.4 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான மற்றும் வன்பொருள் வணிகம் 51 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கிறது மற்றும்  

நாட்டின் நிகர வளர்ச்சியில் 9% பங்களிக்கிறது. எனவே, ஒரு வன்பொருள் வணிகம் என்பது அதிக வளர்ச்சி, லாபம் தரும் மிக சிறந்த தொழில் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 

முடிவுரை வன்பொருள் வணிகத்தில் 30% லாபத்தைப் பெற தேவையான நுட்பங்கள் பற்றி அனைத்தையும் ffreedom ஆப் வழியாக அறிந்துகொண்டோம்.  

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.