Home » Latest Stories » தனிப்பட்ட நிதி » முத்ரா கடனை நீங்கள் எவ்வாறு பெறலாம்

முத்ரா கடனை நீங்கள் எவ்வாறு பெறலாம்

by Bharadwaj Rameshwar
786 views

முன்னுரை 

முத்ரா கடன், பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. முத்ரா என்பது மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் மற்றும் ரீஃபைனான்ஸ் ஏஜென்சியை குறிக்கிறது. முத்ரா கடன் திட்டத்தின் மூலம் நீங்கள் எப்படி கடன் பெறுவது என்றும் முத்ரா கடன் பெறுவதற்கு உங்களுக்கு இருக்க வேண்டிய தகுதி என்ன என்றும் இதில் நன்றாக அறிந்து கொள்ளலாம். அதே போல் எந்த வங்கிகளில் இந்த முத்ரா கடன் திட்டத்தை பெற முடியும் என்றும் வங்கிகளில் வட்டி விகிதம் எப்படி இருக்கிறது என்றும் இந்த கோர்ஸில் நன்றாக அறிந்து கொள்ளலாம்.

முத்ரா கடனின் முக்கிய நோக்கங்கள் 

கடன் வாங்குபவர் மற்றும் சிறு கடன் வழங்குபவர்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உள்ளடக்கிய பங்கேற்பு மூலம் துறையில் ஒரு ஸ்திரத்தன்மையை உருவாக்குவது முதன்மையான மற்றும் முக்கியமான நோக்கமாக இருக்கிறது. இந்த கடன் திட்டம் சிறு கடன் வணிகர்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது ஏனென்றால் இப்படி சிறு நிறுவனங்களுக்கு வழங்குவதால் அந்த நிறுவனத்தின் மூலம் தனிநபர், சிறிய தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த அதிகம் உதவ கூடியதாக இருக்கிறது. இதனால்  கடன் பெறுபவர்கள் அதிக பலன் பெறுகிறார்கள். வணிகத் தோல்விகளைத் தவிர்க்க அல்லது சரியான நேரத்தில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடன் வாங்குபவர்களுக்கு கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்குதல் ஒரு முக்கிய நோக்கமாக இருக்கிறது. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கு கடன் வழங்குபவர்கள் பின்பற்ற வேண்டிய மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வகுக்கவும் முத்ரா திட்டம் உதவியாக இருக்கும்.

ஏன் முத்ரா கடன் பெற வேண்டும்?

முத்ரா கடன் திட்டம் ஏன் உருவாக்கப்பட்டது என்றும் நீங்கள் ஏன் முத்திரை கடன் பெற வேண்டும் என்பதையும் இதில் கற்றுக் கொள்ளலாம். 

  • பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் சிறு வணிகர்களுக்கும் வணிக உரிமையாளர்களுக்கும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. இதனால் அதிக மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். 
  • வங்கிகளில் இருக்கும் வணிக கடன்கள் அதிகமாக பெரிய நிறுவனங்களுக்கே வழங்கப்படுகிறது இதனால் சிறு வணிகங்களை முறையாக நடத்துவதற்கு போதுமான தொகை இல்லாமலும் கடன் பெற முடியாமலும் பாதிக்கப்படுகிறார்கள். 
  • சாதாரண கடனில் இருக்கும் அதிக வட்டி விகிதமும் சிறு வணிகர்களை அதிகம் பாதிக்கிறது.
  • இந்த நிலையை மாற்றுவதற்காகவும் தங்கள் நிறுவனத்திற்கு எளிதாகவும் குறைந்த வட்டி விகிதத்துடனும் கடன் பெற இந்த முத்ரா கடன் திட்டம் உருவாக்கப்பட்டது.
  • நிறுவன நிதி எப்போதும் சிறு வணிகங்களுக்கு பொருத்தமானதாக இருந்தபோதிலும், போதுமான கார்பஸ் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத கடன் மேலாண்மை ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு அதைச் சென்றடையவில்லை. 
  • பெரிய பெருநகரங்களுக்கு அப்பால் பரவியுள்ள பல இளம் மற்றும் வளரும் தொழில் முனைவோரின் அபிலாசைகளை நிறைவேற்ற முத்ரா ஒரு கனவைக் கொண்டுள்ளது.
  • அரை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சிறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதில் இருந்து பின்வாங்கும் நிறுவன கடன் வழங்குபவர்களுக்கு திருப்பிச் செலுத்துதல் எப்போதும் ஒரு முக்கிய கவலையாக உள்ளது. 
  • ஆனால் முத்ரா இந்த முன்னோடியில் கடன் வழங்குபவர்களுக்கு உறுதியளிக்கிறது மற்றும் வங்கிகள் மற்றும் MFI கள் இரண்டிற்கும் உதவுவதாக உறுதியளிக்கிறது மேலும் சிறு வணிக உரிமையாளர்கள் ஒரு பொதுவான தளத்தில் வருவார்கள்.

 கடன் பெறுவதற்கான தகுதிகள் 

இந்த பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் யாரெல்லாம் கடன் பெறலாம் என்றும் கடன் பெறுவதற்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்பது குறித்து அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். இந்த கடன் திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவரை மூன்று  வகையாக பிரிக்கிறார்கள். அதாவது தொடக்க நிலையாளர்கள், நடுத்தர அளவிலான நிதி தேடுபவர்கள் மற்றும் மேம்பட்ட நிலை வளர்ச்சி தேடுபவர்கள் என மூன்று வகையாக கடன் பெறுபவர்களை பிரித்து அதற்கு தகுந்தவாறு கடன் மற்றும் வட்டி தொகையை பிரித்தளிக்கிறார்கள்.

இந்த பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் முத்ரா கடன் பெறுவதற்கான தகுதிகள் :

  • முதலில் நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • வணிக நோக்கத்திற்காக கடன் பெறலாம்.
  • புதிதாக தொடங்க நினைக்கும் தொழிலுக்கு இந்த கடனை பெறலாம்.
  • சிறு வணிகர்கள் இந்த கடனை பெற முடியும்.
  • சிறு வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக இந்த கடன் பெறலாம்.
  • இந்த முத்ரா கடனை பெறுவதற்கு உங்கள் சிபில் ஸ்கோர் சரியாக இருக்க வேண்டும்.
  • முத்ரா கடன் பெறுவதற்கு உங்கள் வயது 18 முதல் 65 வயதிற்குள் இருக்க  வேண்டும்.
  • முத்ரா கடனை பெறுவதற்கு உங்களிடம் ஏற்கனவே வணிகம் இருக்க வேண்டும் அல்லது புதிதாக தொடங்குபவராக இருக்க வேண்டும்.
  • இந்த முத்ரா கடனை பெறுவதற்கு நீங்கள் ஒரு சிறிய உற்பத்தியாளராக இருக்கலாம், கலைஞராக இருக்கலாம், பழம் அல்லது காய்கறி விற்பனையாளராக இருக்கலாம், சொந்த கடை வைத்திருக்கலாம் அல்லது நீங்கள் ஒரு விவசாய வகையில் விவசாயம் செய்யக் கூடியவராக  இருக்கலாம்.
  • பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் மூலம் நீங்கள் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் முத்ரா கடன் பெறலாம்.
  • புதிய மற்றும் ஏற்கனவே உள்ள MSME அலகுகள் மூலம் முத்ரா கடன்களை பெறலாம்.
  • பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் பெற இணை அல்லது மூன்றாம் தரப்பு பாதுகாப்பு தேவையில்லை.
  • இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும்.

வங்கிகள் மற்றும் வட்டி விகிதங்கள் 

  • பஜாஜ் பின்சர்வ் வங்கியில் 1% முதல் 12% வரை வருடத்திற்கான வட்டி விகிதம் இருக்கும் இதன் மூலம் 10 லட்சத்திற்கு மேல் கடன் தொகை பெறலாம். 
  • லெண்டிங்கார்ட் ஃபைனான்ஸ் வங்கியில் மாதத்திற்கு 1% மேல் வட்டி விகிதம் இருக்கும் இதன் மூலம் 10 லட்சத்திற்கு மேல் கடன் தொகை பெறலாம்.
  • பிளெக்சி லோன்ஸில் மாதத்திற்கு 1% முதல் வட்டி விகிதம் இருக்கும் இதன் மூலம் 10 லட்சத்திற்கு மேல் கடன் தொகை பெறலாம்.
  • PSB லோன்ஸ் இன் 59 மினிட்ஸ் வங்கியில் 8.50% முதல் உங்களுக்கு வட்டி விகிதம் இருக்கும் இதன் மூலம் 10 லட்சத்திற்கு மேல் கடன் தொகை பெறலாம்.
  • UCO வங்கியில் 7.45% முதல்  வட்டி விகிதம் இருக்கும் இதன் மூலம் 10 லட்சத்திற்கு மேல் கடன் தொகை பெறலாம்.
  • இந்திய யூனியன் வங்கியில் 7.60% முதல் வட்டி விகிதம் இருக்கும் இதன் மூலம் 10 லட்சத்திற்கு மேல் கடன் தொகை பெறலாம்.
  • பரோடா வங்கியில் 8.15% முதல் வட்டி விகிதம் தொடங்கும் மற்றும் இந்த வங்கியில் 10 லட்சத்திற்கு மேல் கடன் தொகை பெறலாம்.
  • பஞ்சாப் நேஷனல் வங்கியில் 9.16% முதல் வட்டி விகிதம் தொடங்கும் மற்றும் இந்த வங்கியில் 10 லட்சத்திற்கு மேல் கடன் தொகை பெறலாம்.
  • SBI வங்கியில் 9.75% முதல் வட்டி விகிதம் இருக்கும் இதன் மூலம் இந்த வங்கியில் 10 லட்சத்திற்கு மேல் கடன் தொகை பெறலாம்.
  • சரஸ்வத் வங்கியில் 11.65% முதல் வட்டி விகிதம் இருக்கும் இதன் மூலம் இந்த வங்கியில் 10 லட்சத்திற்கு மேல் கடன் தொகை பெறலாம்.

இந்த முத்ரா கடன் திட்டத்தின் கீழ் நீங்கள் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 5 வருடம் முதல் தொடங்குகிறது இது அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை 

நீங்கள் ஒரு வணிகத் திட்டத்தைக் கொண்டு வந்தவுடன் பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவின் (PMMY) கீழ் முத்ரா கடனுக்காக உங்கள் அருகிலுள்ள பொது அல்லது தனியார் துறை வங்கியைத் தொடர்பு கொள்ளலாம். உங்கள் வணிக திட்டத்தின் விரிவான விளக்கத்தை வங்கிக்கு வழங்கவும். பின்னர் முத்ரா படிவத்தை நிரப்பும்படி கேட்கும். உங்களிடம் ஏற்கனவே வங்கியில் நடப்பு கணக்கு இருந்தால் உங்கள் விண்ணப்பம் விரைவாகச் செயல்படுத்தப்படும். வணிகத்திற்கு ஏதேனும் உபகரணங்கள் தேவைப்பட்டால், அதன் விலை பட்டியலையும் தேவையையும் வங்கிக்கு எடுத்துச் செல்லவும். இந்த முத்ரா கடன் பெறுவதற்கு உங்களுக்கு பிணையம் ஏதும் தேவையில்லை இதனால் நீங்கள்  கடன் பெறுவது எளிதாக  இருக்கும்.  இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க உங்கள் அடையாள அட்டை, இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், வாங்கி கணக்கின் 6 மாத இருப்பு நிலை தகவல் போன்ற சான்றிதழ்கள் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

முடிவுரை 

பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவின் (PMMY) கீழ் முத்ரா கடனுக்காக எப்படி விண்ணப்பிப்பது என்றும் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்றும் வங்கிகளின் வட்டி விகிதம் பற்றியும் இதில் முழுமையாக கற்றுக் கொண்டீர்கள். மேலும் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள ffreedom app உங்களுக்கு வழங்கும் முத்ரா கடன் – எந்த பாத்திரமும் இல்லாமல் கடன் பெறுங்கள் என்ற பாடத்திட்டத்தை தனிப்பட்ட நிதி கோர்ஸில் கற்றுக் கொள்ளுங்கள்.

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.