Home » Latest Stories » தனிப்பட்ட நிதி » உங்கள் எதிர்காலத்தைச் சிறப்பாக மாற்றும் சேமிப்பு திட்டம்

உங்கள் எதிர்காலத்தைச் சிறப்பாக மாற்றும் சேமிப்பு திட்டம்

by Gunasekar K
55 views

நமது தாத்தா, பாட்டி காலத்தில் வருமானம் குறைவு அதைப்போல செலவும் குறைவு. ஆனால், கணினிகளின் உலகமான இந்த 21ஆம் நூற்றாண்டில் வருமானம் பெரிது, செலவு அதை விட பெரியது. வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது, பிள்ளைகளின் படிப்பு மற்றும் திருமணம் போன்ற பல செலவுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். 

பொருட்களின் விலை தற்போது உள்ளதை விட எதிர்காலத்தில் அதிகமாகவே இருக்கும். அதற்கேற்ப நாம் எதிர்காலத்தில் சம்பாதிக்க முடியும் என்றாலும் நமது முதுமை காலத்தில் யாரையும் சார்ந்து வாழாமல் குறிப்பாக யாருக்கும் பாரமாக இருக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக சேமித்து வைக்க வேண்டும்.  எனவே, இப்போது வாழும் வாழ்க்கை முறையை நமது முதுமை காலத்திலும் தொடர விரும்பினால் அதற்கேற்ப வருமானம் வேண்டும். இளமையான காலத்தில் உழைப்பது போல வயதான காலத்தில் உழைக்க முடியாது. ஆகையால், இளமை காலத்தில் சம்பாதிக்கும் பணத்தை நல்ல திட்டங்களில் முதலீடு செய்து வைக்க வேண்டும். 

நமது இந்தியாவில் அரசு, தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் பல வகையான கவர்ச்சிகரமான சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில் நாம் இங்கு பார்க்க போவது தபால் நிலைய மாத வருமானத் திட்டம் – பாதுகாப்பு மற்றும் உத்திரவாதம் என இரண்டையும் வழங்கும் ஒரு சிறப்பான முதலீட்டு தேர்வு.

ஒரே கல்லில் இரண்டு பலன்கள் – முதலீடு மற்றும் வட்டி 

முதலீடு என்றாலே அனைவரும் பின்வாங்குவதற்கான காரணம் நாம் முதலீடு செய்யும் பணம் ஒழுங்காக நமக்கு திரும்ப கிடைக்குமா? அல்லது அதில் ஏதேனும் தொகை குறையுமா? என்பது தான். அதற்காகவே மத்திய அரசின் உத்திரவாதத்தோடு தபால் நிலைய மாத வருமானச் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 4.5 லட்சங்கள் வரை முதலீடு செய்யலாம். கூட்டு கணக்கு என்றால் 9 லட்சங்கள் வரை முதலீடு செய்யலாம். 

மேலும், இந்தத் திட்டத்தில் நீங்கள் பெறும் வட்டி வங்கி சேமிப்பில் பெறும் வட்டியை விட மிகவும் அதிகம். அதாவது, ஆண்டுக்கு 6.7% சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் நிலையான வருமானத்தை உருவாக்கும் மிகவும் குறைவான ஆபத்து உள்ள மாத வருமானச் சேமிப்பு திட்டம். 

அதிசிறந்த பாதுகாப்பு மற்றும் உத்திரவாதமுள்ள சேமிப்பு திட்டம் 

தபால் நிலைய மாத வருமானத் திட்டம் மத்திய அரசின் கீழ் செயல்படும் தபால் நிலையங்களால் வழங்கப்படுகிறது. எனவே, நமது முதலீட்டிற்கு என்ன ஆகும்? என்று கவலைபட தேவையில்லை. நீங்கள் முதலீடு செய்யும் தொகை கண்டிப்பாக கிடைத்துவிடும். உதாரணமாக, முருகன் இந்தத் திட்டத்தில் நான்கரை லட்சங்கள் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மாத மாதம் 2,475 ரூபாய் கிடைப்பதோடு முதிர்வு காலத்திற்கு பின் முதலீடு செய்த தொகையான நான்கரை லட்சங்கள் அப்படியே வழங்கப்படும். அதில் ஒரு ரூபாய் கூட குறையாது. 

மேலும், முதலீட்டாளர் விரும்பினால் திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்து கொள்ளலாம். 

சிறப்பான அம்சங்கள் நிறைந்த சிறப்பு சேமிப்பு திட்டம் 

தபால் நிலைய மாத வருமானத் திட்டம் என்பது பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய நல்ல முதலீட்டு திட்டம். முதலில், குறைந்த முதிர்வு காலம். பிற சேமிப்பு திட்டங்களைப் போல பல ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை. ஐந்து வருடங்களில் உங்கள் முதலீட்டு பணத்தைத் ஒரு ரூபாய் கூட குறையாமல் திரும்ப பெற்று கொள்ளலாம். மாத மாதமும் குறிப்பிட்ட அளவு வருமானம் பெறலாம்.

உங்கள் முதலீடு குறைந்தது 1000 ரூபாயில் தொடங்கலாம். 1000 ரூபாய் அல்லது அதன் மடங்குகளாக முதலீடு செய்யலாம். உங்கள் நாமினியை நியமித்து கொள்ளலாம். எதிர்பாராத நிகழ்வுகளின் போது முதலீட்டு பணம் உங்கள் மனைவி, மகள் அல்லது மகனை சென்றடையும். 

எதிர்காலத்தைப் பாதுகாக்கும் மேன்மையான திட்டம் 

சாதாரண வங்கி கணக்கு சேமிப்பு திட்டத்தில் கிடைக்கும் வட்டி (ஆண்டுக்கு 2.50% முதல் 4%) விட அதிக வட்டி தரும் திட்டமாக தபால் நிலைய மாத வருமானத் திட்டம் உள்ளது. அதாவது, இத்திட்டத்தின் கீழ் நீங்கள் பெறும் வட்டி ஆண்டுக்கு 6.7%. உங்கள் பணத்தை ஒன்று நேரடியாக தபால் நிலையத்திலோ அல்லது உங்கள் சேமிப்பு கணக்கிலோ பெற்றுக்கொள்ளலாம். 

பெற்ற பணத்தை மீண்டும் திட்டமிட்ட முதலீட்டு திட்டத்தில் (SIP) முதலீடு செய்யலாம். தேவைப்பட்டால் கணக்கை முன்கூட்டியே முடித்து கொள்ளலாம். மேலும், 1 வருடத்தில் திரும்ப பெறும் பணத்திற்கு எந்தப் பலன்களும் கிடையாது. 2-3 வருடங்களில் திரும்ப பெற்றால் முதலீட்டு தொகையில் இருந்து 2% அபராதமாக பெறப்படும். 3-5 வருடங்களில் திரும்ப பெற்றால் 1% அபராதமாக பெறப்படும்.  

முடிவுரை 

வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் தபால் நிலைய மாத வருமானத் திட்டம் பற்றி தேவையான அனைத்து தகவல்கள் பற்றி தெளிவாக ffreedom ஆப் வழியாக அறிந்துகொண்டோம்.  

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.