Home » Latest Stories » வணிகம் » சிறப்பான பலன் தரும் பட்டு நூல் நகை வணிக கோர்ஸ்

சிறப்பான பலன் தரும் பட்டு நூல் நகை வணிக கோர்ஸ்

by Gunasekar K
343 views

அறிமுகம் (Introduction)

இந்தியர்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம் நகை. நகை என்றவுடன் தங்கம், வெள்ளி & வைரம் தான் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். தற்போது தங்கம் விற்கும் விலையில் அதை வாங்க நமது பல நாள் சேமிப்பு அல்லது சம்பளத்தை எடுத்து வைக்க வேண்டியிருக்கும். மேலும், நாளுக்கு நாள் தங்கத்தின் விலை கூடிக்கொண்டே செல்கிறது. 

எனவே, அதற்கான மாற்றாக கவரிங் நகைகள் உள்ளது. எனினும் சிறிது அதிகமாக பணம் செலவழித்தால் மட்டும் தங்க நகையை ஒத்த கவரிங் நகைகள் வாங்கலாம். தற்போது எளிய மக்கள் மட்டுமல்லாமல் மேல்தட்டு மக்களும் விரும்பி அணியும் ஒரு மலிவான, எடை குறைவான விலையுள்ள பட்டு நூல் நகை. 

பட்டு நூல் நகை என்பது பட்டு நூலால் மணிகள், விரும்பிய டிசைன்கள், வண்ண நூல்கள் சேர்த்து கையால் தயாரிப்பது. இவை அணிவதற்கு எளிதானது, விலை மலிவானதாக இருந்தாலும் பார்க்க அதிநவீனமான நகைகள் போன்று இருக்கும். உங்கள் தோற்றத்தையே நவீனமாக மற்றும் திறன் கொண்டது இந்த பட்டு நூல் நகைகள்.  

பளபளக்கும் நகை, தங்கம் அல்ல இழை 

இது என்ன பளபளவென்று தங்கம் போல உள்ளது. ஆனால், இலகுவாக உள்ளது. அணிவதற்கு எளிதாக உள்ளது. பச்சை, நீலம், மஞ்சள் என பல வண்ணங்களில் உள்ளது. ஆம். பட்டு நூல் நகை. தங்கம் விலை ஏற்றம் எளிய மக்கள், நடுத்தர மக்கள் மட்டுமில்லாமல் உயர்தட்டு மக்களையும் வெகுவாக பாதித்துள்ளது. எனவே, மக்கள் தங்களை நன்றாக வெளிப்படுத்திக்கொள்ள வேறு வேறு பொருட்களை நாடுகின்றனர்.

உதாரணமாக, கவரிங் நகைகள். பார்க்க தங்கம் போல காட்சியளிப்பதால் பெரும்பாலானவர்களின் தேர்வாக உள்ளது. எனினும், விரைவில் பொலிவிழந்து விடும் தன்மை கொண்டது. ஒரு சிலருக்கு புண்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் கொண்டது. இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வாக பட்டு நூல் நகை வந்துள்ளது. இவை பளபளப்பானது, எளிதாக வண்ணம் ஏற்ற முடியும். அத்துடன் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிறம், வடிவமைப்பு போன்றவற்றை நீங்கள் தீர்மானிக்க முடியும். 

குறைந்த விலை, நிறைவான பொருள் 

ஒப்பீட்டு அளவில் தங்கம் மற்றும் கவரிங் நகைகளுடன் ஒப்பிடுகையில் பட்டு நூல் நகை பல மடங்கு விலை குறைவானது. ஆனால், பட்டு நூல் நகையின் தோற்றம் தங்க, கவரிங் நகைகளை விட மிகவும் மேம்பட்டது. பட்டு நூல் நகை அணிவதற்கு மிகவும் எளிதானது, பல வகைகள், பல வண்ணங்களில் கிடைக்கிறது. 

வாடிக்கையாளருக்கு கிடைக்கக்கூடிய தேர்வுகள் மிகவும் அதிகம். உங்கள் விருப்பம் போல் மணிகள், கண்ணாடிகள் என பலவற்றை சேர்த்து உருவாக்கலாம். எனவே, தங்க மற்றும் கவரிங் நகைகளில் காணப்படும் சிறப்பான தோற்றம் பட்டு நூல் நகைகளிலும் கிடைக்கிறது. ஆகையால், குறைந்த விலையில் அதிக நகைகள், அதிக வகைகள் வாங்க விரும்பும் எளியவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் உயர்மட்ட வகுப்பினர் என அனைத்து வகையான மக்களும் விரும்பும் தேர்வாக உள்ளது.

மேம்பட்ட தோற்றம் மற்றும் அணிவதற்கு வசதியானது 

ஒரு உதாரணம் எடுத்துக்கொள்வோம். நீங்கள் ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டும். உங்கள் வீட்டிலிருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊரில் திருமணம் நடைபெறுகிறது. அவ்வளவு தூரம் தங்க நகைகள் கொண்டு செல்வதில் உங்களுக்கு விருப்பம் இல்லை. அத்துடன் நகைகள் அனைத்தும் 10 சவரன்கள் அதற்கு மேல் உள்ளது. இப்போது அவற்றை எடுத்து செல்வது கடினம். மேலும், திருமண நிகழ்வில் அதிக நேரம் அணிய இயலாது. 

இது போன்ற சூழல்களில் எடை குறைவானதும், பல வண்ணங்களில் உள்ளதும், அதிக இட தேவை இல்லாததும், விலை குறைவானதுமான பட்டு நூல் நகை முக்கிய பங்கு வகிக்கிறது. பட்டு நூல் நகை உங்கள் ஒட்டுமொத்த தோற்றத்தையே நவீனமாக மாற்றும் திறன் கொண்டது. 

ஆச்சர்யமூட்டும் பட்டு நூல் நகைகளின் வகைகள் 

பட்டு நூல் நகை என்பது மோதிரம், வளையல், செயின், பிரேஸ்லெட், ஒட்டியாணம், கடா, கொலுசு என தங்கம், வெள்ளியில் செய்யப்படும் அனைத்து நகை வகைகளும் பட்டு நூலில் நகைகளாக தயாரிக்கப்படுகிறது. 

இவற்றில் பல வண்ண மணிகள், கற்கள், கண்ணாடி துண்டுகள், பிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை சேர்க்கப்பட்டு மேலும் மெருகூட்டப்படுகிறது. 

முடிவுரை வீட்டிலிருந்தபடியே பட்டு நூல் நகை வணிகம் தொடங்கி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்க தேவையான நுட்பங்கள் பற்றி அனைத்தையும் ffreedom ஆப் வழியாக அறிந்துகொண்டோம். 

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.